செய்தித் துளிகள் செப் 2010
- காஸா மீது இஸ்ரேல் விதித்திருக்கும் கடல்வழித் தடை உத்தரவை மீறி காஸாவில் நுழைய முயன்ற 'ஐரீன்' என்ற கப்பலை இஸ்ரேல் படையினர் கைப்பற்றித் தடுத்தனர்.
- சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் (46) நீதிமன்றக் காவல் அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- செப்.30: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பாக கோபத்தைத் தூண்டும்வகையில் நண்பர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய ஒச்சிராவைச் சேர்ந்த ஜெயக்குமார், சுபாஷ், மனு மற்றும் ஜிஜோ ஆகிய 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.அயோத்தி தீர்ப்பு, நாளை வெளியாக இருப்பதையொட்டி, பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டில் நாளை ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்று அறிக்கப்பட்டுள்ளது.
- அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தமிழகத்தில் ஒழுங்கு நடமுறைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் கடந்த பலநாட்களாக தன்பக்கம் ஈர்த்துள்ள பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, நாளை (30ம் தேதி) மாலை அறிவிக்கப்படுவதாக உள்ளது. https://www.allahabadhighcourt.in/indexhigh.html என்ற இணையதளத்தில் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகிறது.
- ஒற்றுமைதான் நமது சமூகத்தின் பலம். எனவே அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என, சோனியா காந்தி & பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளனர்.
- இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்று கடத்திச் சென்றனர்.
- இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள் 2 மாதத்தில் அமைக்கப்படும் என்று பிளாக்பெர்ரி உறுதிமொழி கூறியது. 2 மாதத்தில் பணிகளை முடிக்காவிட்டால் பிளாக்பெர்ரிக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ’’நானும் என்னைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நாளை இணைகிறோம்”. தலைவர் திருமாவளவனை சமீபத்தில் சந்தித்த போது அவரது அன்பும் அரவணைப்பும் சகோதரத்துவ ரீதியில் இருந்தது. அவரால் ஈர்க்கப்பட்டேன் - சினிமா தயாரிப்பாளர் காஜாமைதீன்.
- அரசு மருத்துவர் ஒருவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியை, லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- செப்.28: அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
- இங்கிலாந்தில் சிறுவர், சிறுமிகளிடம் அங்குள்ள பாதிரியார்கள் “செக்ஸ்” குற்றம் இழைத்ததாக குற்றச்சாட்டு, எனவே, போப் ஆண்டவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை நடத்தினர். இதற்க்கு போப் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.
- சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்களாகியும் இதுவரை அதன் முழுமையான நோக்கம் நிறைவேறவில்லை - எஸ்.எம்.கிருஷ்ணா.
- அமெரிக்காவின் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்திருப்பதன் படி 2006-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
- ஐ நா சபையின் பெண்களுக்கான புதிய அமைப்பில் சிலி நட்டு முன்னால் அதிபரான மிச்சிலி பாச்லத் என்ற பெண் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்
- தென்மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள மனிதஉரிமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக முதன்முறையாக பெங்களுரூவில் மனிதஉரிமை ஆணைய கோர்ட் தொடங்கப்பட்டுள்ளது.
- காஷ்மீர் இளைஞர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - சோனியா
- தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.
- திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சாலையில் கம்பிவேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
- சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க பிரிண்டர் வசதியுடன் கூடிய 62 புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது - மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன்
- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளார். இதையொட்டி தகவல் தொழில்நுட்பப் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழு விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது.
- அயோத்தி ஹிந்துக்களின் மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்னை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் தடையாக இல்லாமல் மத மாச்சரியங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
- இங்கிலாந்தில் கலாசாரம் சீரழிந்து வருகிறது, இதை தடுக்க அங்கு பள்ளிகளில் “செக்ஸ்” கல்வி புகுத்தப்பட்டுள்ளது. இருந்தும், சிறுமிகள் கர்ப்பம் அடைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்தவித தடையும் இன்றி 13 வயது சிறுமி கூட கருக்கலைப்பு மாத்திரை களை பெற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது.
- அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்
- விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 14 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
- ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரிட்டன் ராணுவத்தினர் போதை மருந்து கடத்தியதாக புகார் எழுந்துளளதால் ராணுவ விசாரணக்கு பிரிட்டன் உத்தவிட்டுள்ளது. ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அதை பாஜக ஏற்கும். நீதிமன்றத்தின்உத்தரவை மதிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
- ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அதை பாஜக ஏற்கும். நீதிமன்றத்தின்உத்தரவை மதிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
- பாபர் மசூதி இடிப்பு - உ.பி. அரசையும், பாஜகவையும் நம்பியதன் மூலம், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு தப்புக் கணக்குப் போட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
- அயோத்தியில் பாபர் மசூதியை பாஜகவினரும், சங் பரிவார் அமைப்பினரும் இடிக்கப் போவது குறித்த உளவுத் தகவல் ஏற்கனவே உ.பி. போலீஸாருக்குத் தெரியும் என்று ரேபரேலி கோர்ட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா (அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்) கூறியுள்ளார்.
- அமெரிக்கா பாஸ்டர் ஜோன்ஸுக்கு எழுந்த எதிர்ப்பின் எதிரொலி குர்ஆன் எரிப்பு தினம் கைவிடப்பட்டது. ஒபாமாவின் வேண்டுகோளுக்கும் உலகம் முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பின் விளைவின் வெற்றி.
- அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குரான் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாடிகன், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது.
- நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலை சம்பவங்கள். இவற்றில், பெரும்பாலான கொலை சொத்து தகராறு, காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன.
- ஈத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ அதிகாரிகள் மீது 1,535 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 35 வழக்குகளில் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தீர்ப்பு வெளியானது - லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வால்
- தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அவரது 4-வது மனைவி போன்ஜிவி குளோரியா நகேமா மூலம் விரைவில் 22-வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். 21-வது ஆண் குழந்தை 2-வது மனைவிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிறந்தது. அதிபரின் 4 மனைவிகள், பிள்ளைகளைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி வரை செலவாகிறது.
- பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல் கட்டமாக 20 மில்லியன் டாலருக்கான காசோலையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் இந்தியா அளித்துள்ளது.
- பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக அழைக்கக் கூடாது என்று அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - தொல். திருமாவளவன்
- தமிழகத்தில் காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா
- அயோத்தியில் இன்று (SEP 18) பாதுகாப்புப் படையினரின் கொடிஅணிவகுப்பு நடத்தப்பட்டது. அதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
- அயோத்தி நில விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதிக் கட்ட முயற்சியாக இந்த வழக்கில் சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் இன்று (SEP 17) ஆஜராக வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்காவில் உள்ள 21 பெரிய நகரங்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் நடந்த ஆய்வில், சுமார் 8 ஆயிரம் ஓரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் லெஸ்பியன்களில் ஐந்தில் ஒருவருக்கு (20 சதவீதம் பேருக்கு) எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
- கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க 2010-11ம் ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிர்கடன் பெற்று முறையாக செலுத்தியவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும - கலெக்டர் ஹரிஹரன்
- நீதிமன்றங்களில் உள்ள 95 சதவீத வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவையாக உள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், சமரச தீர்வு மைய திட்டக் குழுவின் தலைவருமான ஆர்.வி.ரவீந்திரன் தெரிவித்தார்.
- தனது இளைய மகன் தேஜஸ்வியை பயிற்சி அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளார் முன்னாள் கிங் மேக்கர் லாலு பிரசாத் யாதவ்.
- தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உடைந்த பாலத்துக்குப் பதிலாக இரும்பால் ஆன பாலத்தை (பெய்லி பிரிட்ஜ்) ராணுவம் அமைக்கவுள்ளது.